Posts

Showing posts with the label payment-gateway

ரூபே வின் நன்மைகள்

நமது வங்கி அட்டைகளின் பேமண்ட் கேட்வே க்கு இவ்வளவு காலம் நாம் வெளிநாட்டு நிறுவனங்களான விசா / மாஸ்டர் இரண்டை மட்டுமே நம்பி இருந்தோம். அதனால் நமக்கு ஏற்படும் இழப்ப ுகள், ௧.ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும் ஒரு சதவீதம் பேமண்ட் கேட்வே நிறுவனங்களுக்கு மறைமுகமாக போகும். இதன்மூலம் வருடம் பல ஆயிரம் கோடிகள் நம் பணம் வெளிநாட்டுக்கு சென்று கொண்டிருக்கிறது. ௨. நமது செலவழிக்கும் தகவல்கள் அனைத்தும் இந்திய வங்கிகளிடம் இல்லாமல் வெளிநாட்டுகாரர்களிடமே போய் சேரும். பெரு வணிக- அரசியல் திட்டமிடலுக்கு இந்த தகவல்கள் பேருதவியாய் இருக்கும். ௩. இந்த பேமண்ட் கேட்வே நிறுவனங்கள் நுழைவு கட்டணம், அது இது என்று தாளித்ததால், சிறு வங்கிகள் ஏ.டி.எம். கடன் அட்டைகள் போன்ற சேவைகளை தர இயலவில்லை. பெரிய வங்கிகள் தந்தாலும் அந்த கட்டணங்கள் வாடிக்கையாளரிடம் இருந்தே மறைமுகமாக போய்கொண்டு இருந்தது. இப்போது இவற்றிற்கு மாற்றாக பாரதத்தின் சொந்த கேட்வேயான ரூபே வந்துள்ளது. தொழில்நுட்ப முன்னோடியான பாரதம் இவ்வளவு நாள் இந்த திட்டம் செயல்படுத்தாது வைத்தது ஆச்சரியம். சீன அரசு ஏற்கனவே செயல்படுத்தி விட்டது ...