பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..!
''பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், இந்திய மக்களை பரிசோதனைக்கூட எலிகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. இது, நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும்'' -இப்படி எச்சரித்திருப்பது... தனியார் தொண்டு நிறுவனத்தினரோ... பொதுநல ஆர்வலர்களோ அல்ல... உச்ச நீதிமன்றம்! பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள், இந்தியாவில் தாறுமாறாக பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இங்கே முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இங்கேயுள்ள அரசுகள் கண்டுகொள்வதே இல்லை! இந்நிலையில், 'புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மருந்துகளை விற்பனைக்கு அனுப்பும் முன்பாக அவற்றைப் பரிசோதித்து அதன் விளைவுகள் குறித்து நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக இந்தியர்களிடம் சட்டவிரோதமாக அம்மருந்துகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட 233 பேர், கைக்குழந்தை முதல் 15 வயதுக்கு உட்பட்ட 1,833 பேரிடம் இத்தகைய மருந்துகளைக் கொடுத்து பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 2008&ம் ஆண்டு 288 பேரும், 2009&ம் ஆண்டு 637 பேரும், ...